sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது வெள்ள அபாயத்தால் எச்சரிக்கை

/

குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது வெள்ள அபாயத்தால் எச்சரிக்கை

குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது வெள்ள அபாயத்தால் எச்சரிக்கை

குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது வெள்ள அபாயத்தால் எச்சரிக்கை


ADDED : அக் 09, 2024 12:51 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது

வெள்ள அபாயத்தால் எச்சரிக்கை

டி.என்.பாளையம், அக். 9----

டி.என்.பாளையம் அருகே குன்றி மலையடிவாரத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இதன் மூலம், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,500 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு, 41.75 அடி. நேற்று முன்தினம், 40.46 அடியாக நீர்மட்டம் இருந்தது.

அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான கடம்பூர், குன்றி, மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை வனப்பகுதியில் நேற்று முன்தினம் கொட்டிய மழையால் நீர்வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை நேற்று காலை எட்டியது.

இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அணையை சுற்றியுள்ள வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்துார் சுற்றுவட்டார பகுதி மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, கொங்கர்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us