/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளர் நலத்துறை சோதனை 23 நிறுவனங்களில் முரண்
/
தொழிலாளர் நலத்துறை சோதனை 23 நிறுவனங்களில் முரண்
ADDED : ஆக 06, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வர்கள் கடந்த மாதம், மாவட்டத்தில் எடையளவு சட்டத்தில் ஆய்வு செய்தனர்.
மொத்தம், ௧10 கடைகளில் ஆய்வு செய்ததில், 20 கடைகளில் முரண்பாடு காணப்பட்டது. அதுபோல பொட்டல பொருட்கள் விதிப்படி 49 கடை, நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 2 கடைகளில் முரண்பாடு தெரிய வந்தது.
குழந்தை தொழிலாளர் சோதனையில், 15 இடங்களில் நடந்த சோதனையில், ஒரு நிறுவனத்தில் ஒரு வளரிளம் பருவ தொழிலாளர் கண்டறியப்பட்டார்.
முரண்பாடு கண்டறியப்பட்ட கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.