/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பராமரிப்பின்றி ஏரி சிறுவர் பூங்கா படுமோசம்
/
பராமரிப்பின்றி ஏரி சிறுவர் பூங்கா படுமோசம்
ADDED : மார் 17, 2025 04:26 AM
கோபி: கோபி, வேட்டைக்காரன்கோவில் அருகே இந்திரா நகரில், 2.28 கோடி ரூபாயில் செங்குட்டை ஏரியின் சுற்றுச்சூழலை மறு சீர-மைப்பு செய்தனர். தவிர பல்வேறு நிதியை கொண்டு, சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம் வசதி செய்யப்பட்டது. தினமும் காலை 9:30 மணி முதல், மாலை 5:00 மணி வரை திறந்தி-ருக்கும். படகு இல்லத்துடன் கூடிய சிறுவர் பூங்காவில் நுழைய, சிறியவருக்கு ஐந்து ரூபாய், பெரியவர்களுக்கு பத்து ரூபாயும் கட்-டணம் வசூலிக்கின்றனர்.
அங்குள்ள ஏரியில் இயந்திர படகில் சவாரி செய்ய, சிறுவருக்கு 25 ரூபாய், பெரியவருக்கு, 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படு-கிறது. தவிர கால்மிதி படகில் நான்கு பேர் பயணிக்க, 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பூங்கா பயன்பாட்டில் இருந்தாலும், போதிய பராமரிப்பின்றி படுமோசமாக காட்சியளிக்கிறது. சிறிய-வர்கள் பயன்
படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், சேதம-டைந்தும் உள்ளன. இதனால் சிறுவர் வருகை குறைந்து விட்டது. கோபி யூனியன் நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.