/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாயில் கருப்புதுணி கட்டி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
/
வாயில் கருப்புதுணி கட்டி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 18, 2025 05:15 AM

ஈரோடு: தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், டிச.1 முதல் இ-பைலிங் கட்டாயமாக்கிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். வக்கீல்கள் தாக்கல் செய்யும் வழக்கு-களை கோப்புக்கு எடுத்த பின் நீதிமன்ற ஸ்கேனிங் செய்து இணையத்தில் பதிவேற்றி கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சமூக விரோதிகளால் வக்கீல்கள் தாக்கப்பட்டு கொடுங்காயம் அடைந்து உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்-பற்ற சூழலை தடுக்கும் வண்ணம், மத்திய,மாநில அரசுகள் வக்-கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் சரத் சந்தர் தலைமையில் நீதிமன்றத்-துக்கு முன்புறம் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் ஈரோடு அட்வகேட் அசோசியேஷன் தலைவர் கோபால் ராசு தலைமையில், வக்கீல்கள் நீதிமன்றம் முன்புறம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நீதிமன்ற பணி புறக்க-ணிப்பில் ஈடுபட்டனர்

