ADDED : செப் 29, 2024 01:14 AM
அ நிறம் | அளவு
சிறுத்தை தாக்கி
பசுமாடு உயிரிழப்பு
சத்தியமங்கலம், செப். 29-
தாளவாடி அருகே, சிறுத்தை தாக்கி பசு மாடு உயிரிழந்தது.
தாளவாடி அருகே ஒசூரை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவர் தனது தோட்டத்தில் மாடுகள் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை பசுமாட்டை தாக்கி கொன்றது. வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை கேள்விப்பட்ட அந்த பகுதி விவசாயிகள் பீதியில் உள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை, கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
