/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுத்தை நடமாட்டம் அதிகாரி விளக்கம்
/
சிறுத்தை நடமாட்டம் அதிகாரி விளக்கம்
ADDED : செப் 24, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலை சந்திப்பு அருகே, சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதால், வனத்துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். காங்கேயம் வனச்சரக அலுவலர் மவுனிகா, நேற்று அப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: இரண்டு நாட்களாக ஆய்வு செய்ததில், சிறுத்தை நடமாட்டத்துக்கான தடயம் ஏதுமில்லை. இந்தப் பகுதியில் சிறுத்தை வருவதற்கான முகாந்திரமும்
இல்லை. எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.