/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பறந்த 'ஸ்டிரைக்' ஆசிரியர் பட்டியல்
/
பறந்த 'ஸ்டிரைக்' ஆசிரியர் பட்டியல்
ADDED : நவ 26, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில், தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் கடந்த, 18ம் தேதி நடந்தது.
இந்த நாளில் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் ஈரோடு மாவட்டத்தில், 3,147 ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அலுவலர், 85 பேர் என, 3,232 பேர் ஆப்சென்ட் ஆகினர். இவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, பள்ளி கல்வித்துறைக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

