sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உள்ளூர் வர்த்தக செய்திகள்

/

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : ஜூன் 02, 2025 03:56 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 52 ரூபாய்க்கும், நேந்திரன், 43 ரூபாய்க்கும் விற்றது. செவ்வாழை, 1,170, தேன்வாழை, 970, பூவன், 830, ரஸ்த்தாளி, 560, மொந்தன், 520, ரொபஸ்டா, 460, பச்சைநாடான், 440 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 4,460 வாழைத்தார், 9.40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 17 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை, வரத்தான, 14 ஆயிரத்து 345 தேங்காய்களும், 3.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், எள் விற்பனை நடந்தது. வெள்ளை எள் கிலோ, ௯௧ - 130.11 ரூபாய், சிகப்பு எள், 8௮ - 130.69 ரூபாய், கருப்பு எள், 92.69 - 157.77 ரூபாய் என, 579 மூட்டை வரத்தாகி, 49.12 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் விற்பனை நிலையத்தில் நடந்த ஏலத்தில், 2,350 வாழைத்தார் வரத்தானது. செவ்வாழை தார், 150-1,200 ரூபாய்; தேன்வாழை, 100-620 ரூபாய்; பூவன் தார், 80-580; ரஸ்தாலி, 250-800; மொந்தன் தார், 50-450; ஜி-9, 240-550; பச்சை நாடன், 320-500 ரூபாய்க்கு ஏலம் போனது. கதலி கிலோ, 22 முதல் 50 ரூபாய், நேந்திரன் கிலோ, 15 முதல் 42 ரூபாய் என, 4.38 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இருநாட்கள் நடந்த கால்நடை சந்தைக்கு, 4,000க்கும் அதிகமான கால்நடைகள் கொண்டு வரப்பட்டன. மாடுகள், 2,500 முதல் 48 ஆயிரம் ரூபாய்; எருமைகள், 3,௦௦௦ ரூபாய் முதல் 54 ஆயிரம் ரூபாய்; காங்கேயம் காளை ஜோடி, 1.30 லட்சம் ரூபாய்க்கும் விற்றது. இரு நாட்களில், 1.25 கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்றன.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த நத்தக்காடையூர் அருகே, காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 41 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 1.௦௫ லட்சம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 22 கால்நடைகள், எட்டு லட்சம் ரூபாய்க்கு விற்றன.






      Dinamalar
      Follow us