sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உள்ளூர் வர்த்தக செய்திகள்

/

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : ஜூன் 09, 2025 04:08 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஈரோடு மாவட்டம் பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்தில், வெள்ளை ரகம் கிலோ, 78.10 - 127.75 ரூபாய், சிகப்பு ரகம் கிலோ, 72.09 - 109.76 ரூபாய், கருப்பு ரகம், 8௪ - 136.69 ரூபாய் வரை, 688 மூட்டை வரத்தாகி, 54.38 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

* சத்தி பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் கனகாம்பரம் பூ கிலோ, 820 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை பூ, 660, முல்லை பூ, 340, காக்கடா, 320, செண்டுமல்லி, 60, கோழிகொண்டை, 90, ஜாதி முல்லை, 600, சம்பங்கி, 20, அரளி, 80, துளசி,60, செவ்வந்தி, 240ரூபாய்க்கும் விற்பனையானது.

* அந்தியூர் புதுப்பாளையம் பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்துக்கு, 1,680 வாழைத்தார் வரத்தானது. செவ்வாழை தார் 150 ரூபாய் முதல் -1,250 ரூபாய்; தேன்வாழை தார், 80 ரூபாய் முதல் -680 ரூபாய்; பூவன் தார், 120 ரூபாய் முதல் -680; ரஸ்தாளி, 250 ரூபாய் முதல் -700; மொந்தன், 180 ரூபாய் முதல் -520; ஜி--9, 240 ரூபாய் முதல் -550; பச்சை நாடன், 260 ரூபாய் முதல் -420 ரூபாய்க்கும் ஏலம் போனது. கதலி கிலோ, 22 ரூபாய் முதல் -50 ரூபாய், நேந்திரன் கிலோ, 18 ரூபாய் முதல் -22 ரூபாய் வரை விலை போனது. இந்த கூட்டுறவு சங்கத்ததில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இன்று முதல் எள் ஏலம் நடக்கிறது.

* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, 2 டன் முருங்கை நேற்று வரத்தானது. கருப்பு முருங்கை கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையானது. வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்பினர்.

* காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில், காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 52 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல் 1.௪௦ லட்சம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 22 கால்நடைகள், ஒன்பது லட்சம் ரூபாய்க்கு விற்றன.






      Dinamalar
      Follow us