ADDED : செப் 01, 2025 01:54 AM
* ஈரோடு மாவட்டம் பவானி அருகே மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நடந்தது. வெள்ளை எள் கிலோ, 73.69-112.09 ரூபாய்; கறுப்பு எள், 133.49 ரூபாய், சிகப்பு எள் கிலோ, 82.09-162.89 ரூபாய் வரை, 28 மூட்டை வரத்தாகி, 2.07 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர் புதுப்பாளையம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 1,730 வாழைத்தார்கள் வரத்தாகின. செவ்வாழை தார், 120-750 ரூபாய், தேன்வாழை, 70-560, பூவன், 80-520, ரஸ்தாளி, 260-700, மொந்தன், 60-420, ஜி-9, 90-230, பச்சை நாடன், 240-500 ரூபாய் வரை ஏலம் போனது. கதளி கிலோ, 34-60 ரூபாய், நேந்திரன், 12-25 ரூபாய் வரை, 4.16 லட்சம் ரூபாய்க்கு விற்றது. * புன்செய்புளியம்பட்டி பூ சந்தையில், சீசன் சமயத்தில் ஒரு கிலோ மல்லிகை, 2,000 ரூபாய் முதல் 2,150 வரை விற்றது. தற்போது முகூர்த்தம் இல்லாததால் மல்லிகை விலை சரிந்துள்ளது.
ஒரு கிலோ, 320 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது. இதேபோல் கிலோ, 1,100 ரூபாய்க்கு விற்ற முல்லை, 260 ரூபாய், 400 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 80 ரூபாய்க்கும் விற்றது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் கனகாம்பரம் பூ ஒரு கிலோ, 910 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை-400, முல்லை-300, காக்கடா-200, செண்டு மல்லி-100, கோழிக்கொண்டை-80, ஜாதிமுல்லை-500, சம்பங்கி-80, அரளி-120, துளசி-50, செவ்வந்தி- 240 ரூபாய்க்கும் விற்பனையானது.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, 10 டன் முருங்கை நேற்று வரத்தானது, செடி முருங்கை கிலோ, 30 ரூபாய், மர முருங்கை, 35 ரூபாய், கருப்பு முருங்கை, 40 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரம், 10 டன் வரத்தாகி, அதிகபட்சம் கிலோ, 25 ரூபாய்க்கு விற்றது,