ADDED : டிச 02, 2025 02:54 AM
* ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 9,854 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 40.10 - 56.55 ரூபாய் என, 3,384 கிலோ தேங்காய், ஒரு லட்சத்து, 77,746 ரூபாய்க்கு விலை போனது. கொப்பரை தேங்காய், 168 மூட்டை வரத்தாகி முதல் தரம் கிலோ, 204.01 - 216.89 ரூபாய், இரண்டாம் தரம், 133.69 - 212.22 ரூபாய் என, 7,971 கிலோ, 15 லட்சத்து, 78,181 ரூபாய்க்கு விற்பனையானது. எள், 94 மூட்டை வரத்தாகி வெள்ளை எள் கிலோ, 95.09 - 119 ரூபாய்க்கு விற்பனையானது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 3,240 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ, 1,480, காக்கடா, 1,325, செண்டு மல்லி, 71, கோழி கொண்டை, 49, ஜாதி முல்லை, 1,000, கனகாம்பரம், 400, சம்பங்கி, 50, அரளி, 400, துளசி, 50, செவ்வந்தி, 160 ரூபாய்க்கும் விற்பனையானது.
* அந்தியூரில் நேற்று நடந்த வெற்றிலை சந்தைக்கு, 60 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி சிறியது ஒரு கட்டு, 10 ரூபாய், பெரியது, 35-50 ரூபாய், பீடா வெற்றிலை கட்டு, 25-40 ரூபாய், செங்காம்பு வெற்றிலை கட்டு, 10-20 ரூபாய் என, 3.50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 40,000 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 5௩-60.29 ரூபாய், பச்சை தேங்காய், 49.14-52.84 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 65.36 ரூபாய்க் என, 13,963 கிலோ தேங்காய், 7.35 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 600 கிலோ வரத்தாகி, கிலோ, 135 ரூபாய் என, 81 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 7,070 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 49-57 ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு, 12 மூட்டை வரத்தாகி, கிலோ, 166-212 ரூபாய்; எட்டு மூட்டை எள் வரத்தாகி கிலோ, 97-104 ரூபாய்; இரண்டு மூட்டை பச்சை பயறு வரத்தாகி கிலோ, 90 ரூபாய்க்கும் ஏலம் போனது.

