ADDED : ஆக 27, 2026 03:21 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், ஊதியூர் குண்டடம் ரோடு மலைக்கண்-ணிமார் கருப்பண்ணசாமி கோவில் அருகே, மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி வெங்கடேசன் சோதனையில் ஈடுபட்டார்.
அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதித்தபோது, அவற்றில் 7 டன் ஓடக்கல் இருப்பது தெரியவந்தது. சோதனையின் போது டிரைவர் தப்பினார். லாரியை ஓடக்கலுடன் பறிமுதல் செய்து ஊதியூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
