sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மேம்பாலத்தில் டூவீலர் மீது மோதிய லாரி சேலம் தொழிலாளி பலி; 2 பேர் சீரியஸ்

/

மேம்பாலத்தில் டூவீலர் மீது மோதிய லாரி சேலம் தொழிலாளி பலி; 2 பேர் சீரியஸ்

மேம்பாலத்தில் டூவீலர் மீது மோதிய லாரி சேலம் தொழிலாளி பலி; 2 பேர் சீரியஸ்

மேம்பாலத்தில் டூவீலர் மீது மோதிய லாரி சேலம் தொழிலாளி பலி; 2 பேர் சீரியஸ்


ADDED : அக் 26, 2024 08:11 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானியில் மேம்பாலத்தில் டூவீலருடன் நின்ற மூன்று பேர் மீது, டேங்கர் லாரி மோதியதில், ஒருவர் பலியானார். இருவர் படுகாயம் அடைந்-தனர்.

சேலம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர்கள் சோனு, 22; தமிழ், 26; சேலம், முத்தநாயக்கன்-பட்டி எல்லாயூரை சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 33; மூன்று பேரும் கட்டட தொழிலாளர்கள். கோயம்-புத்துாருக்கு வேலைக்கு சென்ற மூவரும், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து, யமாஹா எப்.இசட்., பைக்கில் சேலத்துக்கு கிளம்பினர். இரவு, 9:30 மணியளவில், ஈரோடு மாவட்டம் பவானி, லட்சுமிநகர் மேம்பாலத்தில் டூவீலரை நிறுத்திவிட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அதிவேகத்தில் வந்த டேங்கர் லாரி, மூவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த மூவரையும் அப்பகுதி-யினர் மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே சோனு இறந்தார். மற்ற இருவரும் பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை, சித்தோடு போலீசார் தேடி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us