/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனைவி, 2 குழந்தைகளை எரிக்க முயற்சி மதுரை வாலிபர் ஈரோட்டில் வெறிச்செயல்
/
மனைவி, 2 குழந்தைகளை எரிக்க முயற்சி மதுரை வாலிபர் ஈரோட்டில் வெறிச்செயல்
மனைவி, 2 குழந்தைகளை எரிக்க முயற்சி மதுரை வாலிபர் ஈரோட்டில் வெறிச்செயல்
மனைவி, 2 குழந்தைகளை எரிக்க முயற்சி மதுரை வாலிபர் ஈரோட்டில் வெறிச்செயல்
ADDED : டிச 10, 2024 07:57 AM
ஈரோடு: ஈரோட்டில் மனைவி, இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவரை, போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலுார், நாவினிபட்டியை சேர்ந்தவர் திரு-மலை செல்வன்,35; கூலி தொழிலாளி. இவர் மனைவி சுகன்யா, 23. தம்பதிக்கு ஒமிஷா, 7, நிகில், 4, என இரு குழந்தைகள் உள்-ளனர். மதுரையில் வசித்து வந்த நிலையில், திருமலை செல்வன் தினமும் மது குடித்து விட்டு, சந்தேகப்பட்டு சுகன்யாவை துன்-புறுத்தியுள்ளார்.
இதனால் ஒரு மாதத்துக்கு முன் ஈரோடு, மாணிக்கம்பாளையம், முனியப்பன் கோவில் வீதி, ஆண்டிகாட்டில்
உள்ள தன் தாய் வீட்-டுக்கு குழந்தைகளுடன் சுகன்யா வந்தார். அதே பகுதியில் ஒரு சாய பட்டறைக்கு
வேலைக்கு சென்று வந்தார்.இரு வாரங்களுக்கு முன் வந்த திருமலை செல்வன், குழந்தை-களை மதுரைக்கு அழைத்து சென்றார். நேற்று
முன்தினம் இரவு குழந்தைகளுடன் வந்தவர், சுகன்யாவிடம் தகராறு செய்து தகாத வார்த்தை
பேசியுள்ளார்.அப்போது கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, சுகன்யா மற்றும் இரு குழந்தைகள் மீது ஊற்றி
தீப்பற்ற வைத்-துள்ளார். இதில் நிகிலுக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்-டது. ஈரோடு அரசு
மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பி வைக்-கப்பட்டார். சுகன்யா புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார்,
திரு-மலை செல்வனை கைது செய்தனர்.