sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

/

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்


ADDED : ஜன 22, 2024 12:04 PM

Google News

ADDED : ஜன 22, 2024 12:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: கணக்கப்பிள்ளையூரில், மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்., கணக்கப்பிள்ளையூரில் மகா மாரியம்மன், விநாயகர், முருகன், கருப்பண்ணசாமி ஆகிய சுவாமிகள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேக விழா செய்வது என்று கிராம பொதுமக்கள், விழா கமிட்டியினர் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கடந்த, 18ல் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீர் கொண்டு வந்தனர். புனித நீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்ட நான்கு கால யாகவேள்வி பூஜைகளை செய்தனர்.

நேற்று காலை யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும், சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கும்பத்தை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். வானில் கருட பகவான் வட்டமிட்டதை அடுத்து, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபி ேஷகம் செய்தனர். பின் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

மகா மாரியம்மன், விநாயகர், முருகன், கருப்பண்ண

சுவாமி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us