ADDED : ஜூலை 04, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, 
கொடுமுடியை அடுத்த வடக்கு புதுப்பாளையம் காலிங்கராயன் 
வாய்க்காலில், ஐந்து தொட்டி மதகு என்ற இடத்தில், 65 வயது மதிக்கதக்க 
அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் தண்
ணீரில் மிதந்தது. உடலில் பல்வேறு 
இடங்களில் மீன்களால் அரிக்கப்பட்ட காயங்கள் இருந்தன. வெள்ளை பனியன், 
லுங்கி, பூணுால் அணிந்திருந்தார். வெங்கம்பூர் வி.ஏ.ஓ., இளமதி 
புகாரின்படி, கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

