sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மூதாட்டி வீடு புகுந்து நகை பறித்தவர் கைது

/

மூதாட்டி வீடு புகுந்து நகை பறித்தவர் கைது

மூதாட்டி வீடு புகுந்து நகை பறித்தவர் கைது

மூதாட்டி வீடு புகுந்து நகை பறித்தவர் கைது


ADDED : டிச 23, 2024 09:28 AM

Google News

ADDED : டிச 23, 2024 09:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, எஸ்.கே.சி. சாலையில் வசிப்பவர் பாப்பம்மாள், 106; கணவன், குழந்தைகள் இல்லை. தனியாக வசிக்கிறார். இரு பெண்கள் கவனித்து கொள்கின்றனர். கடந்த, 11ம் தேதி மாலை வீட்டுக்குள் வந்த ஆசாமி, பாப்பம்மாள் போட்டிருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுபற்றிய புகாரின்படி ஈரோடு டவுன் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பெயிண்டர் விஜயகுமாரை, 42, கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி விஜயகுமாரை, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மூன்று ஆண்டுக்கு முன் மூதாட்டி வீட்டு வேலைக்காக விஜயகுமாரின் தாய் வந்துள்ளார். ஒன்றரை மாதம் வேலை செய்தார். அப்போது தாயை பார்க்க மூதாட்டி வீட்டுக்கு விஜயகுமார் வந்துள்ளார். மூதாட்டி தனியாக வசிப்பதை கவனித்திருந்த விஜயகுமார், நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். முதன் முறையாக நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us