/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புழக்கடையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
/
புழக்கடையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
ADDED : டிச 11, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழக்கடையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
டி.என்.பாளையம், டிச. 11--
டி.என்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம், நரசாபுரம், டேம் ரோட்டை சேர்ந்தவர் பூங்கருப்பன், 70; இவர் தனது வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக, பங்களாப்புதுார் போலீசாருக்கு தகவல் போனது.
போலீசார் ஆய்வில் வீட்டின் பின்புறம், எட்டு அடி உயரத்தில் மூன்று கஞ்சா செடி வளர்ந்திருப்பது தெரிந்தது. செடிகளை பறிமுதல் செய்து
பூங்கருப்பனை கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர்.