ADDED : டிச 16, 2024 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானியில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில், பவானி போலீசார், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதி யில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் சொக்காரம்மன் நகரை சேர்ந்த கிருஷ்ணன், 47, என்பவ-ரிடம், 700 மது பாட்டில்; பவானி கீழ்குப்பத்தை சேர்ந்த ராஜா, 31; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த ஜெக-நாதன் ஆகியோரிடம் தலா, 50 மது பாட்டில்; ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரிப்புதுாரில் கதிர்வேல் என்பவரிடம், 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நால்வரையும் போலீசார் கைது செய்தனர். இதில், 700 மது பாட்டில் பதுக்கி வைத்திருந்த கிருஷ்ணனை, பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

