ADDED : ஜூன் 20, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சர்வதேச
போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி வரும், 26ல் ஈரோட்டில், தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 5 கி.மீ., விழிப்புணர்வு
மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடக்கிறது.
போட்டியில், 14 வயதுக்கு
மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து
கொள்வோர், 25ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் முதல், 500 பேருக்கு விழிப்புணர்வு டி--சர்ட்
வழங்கப்படும் என்று, விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
