ADDED : ஆக 19, 2024 02:58 AM
அ நிறம் | அளவு
பவானி: பவானி அருகே லட்சுமி நகரில், மரம் நடுவோம் மழை பெறுவோம் என பசுமையை வலியுறுத்தி, மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. லட்சுமி நகர் பவிஷ் பார்க்கிலிருந்து வாசவி கல்லுாரி வரை ஐந்து கிலோ மீட்டர் வரை ஒரு பிரிவு, சித்தோடு நால்ரோடு வரை, ௧௦ கி.மீ., என மற்றொரு பிரிவிலும் மாரத்தான் நடந்தது.
முதல் ஐந்து இடங்களை பெற்ற வீரர்களுக்கு, பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என, 375 பேர் கலந்து கொண்டனர்.
