/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தந்தை இறந்த துக்கத்தில் மணமான மகள் தற்கொலை
/
தந்தை இறந்த துக்கத்தில் மணமான மகள் தற்கொலை
ADDED : அக் 11, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தந்தை இறந்த துக்கத்தில்
மணமான மகள் தற்கொலை
டி.என்.பாளையம், அக். 11---
டி.என்.பாளையம் அருகே பெருமுகைபுதுார், வரப்பள்ளம், நடுவீதியை சேர்ந்த கூலி தொழிலாளி எல்லப்பன் மனைவி ஈஸ்வரி, 27; தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சில வாரங்களுக்கு முன் ஈஸ்வரியின் தந்தை இறந்து விட்டார்.
இதனால் மனவேதனையில் ஈஸ்வரி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஈஸ்வரி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை இறந்த துக்கத்தில் ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று, பங்களாப்புதுார் போலீசார் தெரிவித்தனர்.