/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'நீதிமன்ற தீர்ப்பின்படி அதிகபட்ச இழப்பீடு'
/
'நீதிமன்ற தீர்ப்பின்படி அதிகபட்ச இழப்பீடு'
ADDED : ஜன 11, 2025 02:51 AM
பெருந்துறை: சிப்காட் தொழில் முறை நண்பன் சந்திப்பு கூட்டம், பெருந்-துறை சிப்காட் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சென்னை சிப்காட் உதவி பொது மேலாளரும், மேற்பார்வை அலுவலரு-மான அருண்குமார் தலைமை வகித்தார். பெருந்துறை சிப்காட் திட்ட அலுவலர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் பெருந்-துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் மற்றும் பொதுமக்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள் பேசியதாவது: சிப்-காட்டுக்காக மூலம் அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆனால் குறைந்தபட்ச இழப்பீடு கூட நாளது வரை முழுமை-யாக கிடைக்காமல், 30 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வரு-கின்றனர். சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையம் தாமதமாவதற்-கான காரணங்கள் குறித்து விளக்க வேண்டும். சிப்காட் வளா-கத்தில் உள்ள சாய, சலவை, தோல் மற்றும் ரசாயன தொழிற்சா-லைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள திடக்கழிவுகள், கலப்பு உப்-புகள் மற்றும் அபாயகர நச்சு கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும். இவ்வாறு பேசினர்.

