/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு பதக்கம்
/
போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு பதக்கம்
ADDED : ஆக 15, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து போலீஸ் அதிகாரிகள், தமிழக முதல்வரிடம் சிறப்பான பணிக்கான பதக்கத்தை இன்று சென்னையில் பெறுகின்றனர்.
சிறப்பான பணிக்கான அண்ணா விருதுக்கு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி, க்யூ-பிரிவு எஸ்.ஐ. பிரகாஷ், சத்தியமங்கலம் சிறப்பு இலக்கு படை பிரிவு டி.எஸ்.பி.,க்கள் முருகன், சுகுமார், மத்திய அரசின் விருதுக்கு எஸ்.ஐ., சிவ கணேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சென்னையில் நடக்கும், சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி பாராட்ட உள்ளார்.