/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் பொதுக்கூட்டம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் பொதுக்கூட்டம்
ADDED : பிப் 16, 2025 03:37 AM
பெருந்துறை: பெருந்துறை அ.தி.மு.க., வடக்கு ஒன்றியம் மற்றும் பெத்தாம்பா-ளையம் நகரம் சார்பில், எம்ஜிஆர்., 108வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், பெத்தாம்பாளையத்தில் நடந்தது. வடக்கு ஒன்-றிய செயலாளர் ரஞ்சித்ராஜ் தலைமை வகித்தார். பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பெத்தாம்பா-ளையம் நகர செயலாளர் பூபாலகிருஷ்ணன் வரவேற்றார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பணன், கட்சி கொள்கை பரப்பு துணை செயலாளர் கோபி காளிதாஸ் பேசினர்.
கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு குலுக்கல் முறையில் ஐந்து நபர்-களுக்கு தங்க நாணயம், 103 பேருக்கு சிறப்பு பரிசு பொருட்கள், கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் மக்-களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுதுரை, பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் அருள்-ஜோதி செல்வராஜ், விஜயன், ராமசாமி, நகர செயலாளர்கள் பழ-னிசாமி, சிவசுப்பிரமணியன், கமலக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.