/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபட்டுகள் மோதலில் மில் தொழிலாளி சாவு
/
மொபட்டுகள் மோதலில் மில் தொழிலாளி சாவு
ADDED : நவ 06, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபட்டுகள் மோதலில்
மில் தொழிலாளி சாவு
காங்கேயம், நவ. 6-
காங்கேயம், வாய்க்கால் மேட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 65; காங்கேயம்-திருப்பூர் சாலையில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் வாய்க்கால் மேடு அருகில் ஸ்கூட்டியில் சென்றார். ஊத்துக்குளியில் தனியார் மில்லில் வேலை பார்க்கும் பரமேஸ்வரன், 20, மொபட்டில் வந்தார். இருவரின் வாகனங்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டதில், பாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.