/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சியில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்
/
நகராட்சியில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்
ADDED : பிப் 10, 2026 08:46 AM

காங்கேயம்: காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டு பகுதியில் புதிய நலத்திட்டப்பணிகள் தொடக்க விழா, முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் விழா நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் அமைச்சர் பேசிய தாவது: தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 7.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1 முதல் 18 வார்டுகளில் 14.10 கி.மீ., தொலைவுக்கு தார்சாலை அமைக்கப்படவுள்ளது. அய்யாச்சாமிநகர் காலனியில் கட்டப்பட்ட முழு நேர நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். நிகழ்வில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், நகர செயலாளர் சேமலையப்பன், நகர் மன்ற தலைவர் சூர்யபிரகாஷ், நகராட்சி கமிஷனர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

