sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் பெட்டகம் வழங்கிய அமைச்சர்

/

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் பெட்டகம் வழங்கிய அமைச்சர்

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் பெட்டகம் வழங்கிய அமைச்சர்

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் பெட்டகம் வழங்கிய அமைச்சர்


ADDED : நவ 16, 2024 01:40 AM

Google News

ADDED : நவ 16, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில்

பெட்டகம் வழங்கிய அமைச்சர்

ஈரோடு, நவ. 16-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், 'ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்', இரண்டாம் கட்டமாக, அரியலுார் மாவட்டம் வாரணவாசியில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

இதை தொடர்ந்து ஈரோடு, எல்லப்பாளையம் குழந்தைகள் மையத்தில், ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாயாருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.

பிறந்த, 6 மாதம் வரை உள்ள, 552 தீவிர ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள மற்றும் 1,168 மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு, 2,041 ஊட்டச்சத்து பெட்டகங்களை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். இப்பெட்டகத்தில் நெய், புரோட்டின் பவுடர், பேரிச்சம் பழம், இரும்பு சத்து டானிக், துண்டு மற்றும் கோப்பை என, 2,265 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் உள்ளன.

* மொடக்குறிச்சியை அடுத்த சென்னப்பநாயக்கன்பாளையம் அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட துவக்க விழா நடந்தது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி தொடங்கி வைத்து பேசினார். ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகங்களை வழங்கினார்.






      Dinamalar
      Follow us