ADDED : ஆக 08, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, சிறுமியிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்த கார் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை பிலிக்கல்மேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் சதீஷ் குமார், 25, கார் டிரைவர். திருமணமானவர். இவர், மொடக்குறிச்சியை சேர்ந்த, 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து, சதீஷ் குமாரை கைது செய்தனர்.