தொழிலாளியை கொன்ற மைனர் சீர்திருத்தப்பள்ளியில் அடைப்பு
தொழிலாளியை கொன்ற மைனர் சீர்திருத்தப்பள்ளியில் அடைப்பு
ADDED : செப் 16, 2026 06:43 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகே பீர் பாட்டிலால் சமையல் தொழிலாளியை கொன்ற, மைனர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த ஏ.ஜி.புதுார் செங்கோட்டை நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 41; சத்தியை அடுத்த செங்கோட்டை நகரில் நேற்று முன்தினம் காலை சாக்கடையில் சடலமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றி சத்தி போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக கே.என்.பாளையத்தை சேர்ந்த, 17 வயது மைனர் வாலிபரை கைது செய்தனர். சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், பீர் பாட்டிலால் வாலிபர் தாக்கியதில், செந்தில்குமார் இறந்துள்ளார். இதையடுத்து தப்பிய மைனர் வாலிபரை, புளியம்பட்டியில் கைது செய்து, கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
