ADDED : நவ 13, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அவல்பூந்துறை மேட்டூர் மந்தையை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது, 16 வயது மகள் பிளஸ் 2 படிக்கிறார். அடிக்கடி மொபைல் போனை பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனை தந்தை கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த, 11 நள்ளிரவு அனைவரும் துாங்கியதும், வீட்டுக்கு வெளியே வந்த கனிஷ்கா, வீட்டின் வெளிப்புறமாக தாழிட்டு அங்கிருந்து சென்று விட்டார். காலையில் பார்த்தபோது மகளை காணாததால், அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடினர். கிடைக்காத நிலையில் அரச்சலுார் போலீசில் சிவானந்தம் புகார் செய்தார்.

