ADDED : டிச 03, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார் அருகே, மாட்டுவேலம்பட்டி பஞ்.,க்குட்பட்ட அலவாய்மலையில்
பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்-ளது. இங்கு சோமவார திருவிழா,
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் உள்ள, 5 திங்கட்கிழமைகளில்
கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, 3வது திங்கட்கிழமையான, நேற்று
ஆயிரக்க-ணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில்
அடிவாரத்தில் புதிதாக சுயம்பு நாகராஜன் என்ற புற்றுக்கண் உரு-வாகி உள்ளதால்,
பொதுமக்கள் அதன் மீது மஞ்சள், சிகப்பு துாவி வணங்கினர்.மேலும், மலை மீது ஏறமுடியாத பக்தர்களுக்கு, மலை அடிவா-ரத்தில் உற்சவ
சிலை வைத்து பக்தர்களுக்கு ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பொதுமக்கள்
இக்கோவிலுக்கு வருவதற்கு, அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்திருந்தனர்.