/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முருங்கை 15 டன் வரத்து கிலோ ரூ.50க்கு விற்பனை
/
முருங்கை 15 டன் வரத்து கிலோ ரூ.50க்கு விற்பனை
ADDED : செப் 30, 2024 12:56 AM
முருங்கை 15 டன் வரத்து
கிலோ ரூ.50க்கு விற்பனை
காங்கேயம், செப். 30-
தமிழகத்தில் கொடி முருங்கை, செடி முருங்கை, மரம் முருங்கை, செம்முருங்கை என நான்கு வகை உள்ளன. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், முத்துார், காங்கேயம், புதுப்பை பகுதிகளில் செடிமுருங்கை, மரமுருங்கை ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
வெள்ளக்கோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுகளுக்கு அனுப்புகின்றனர். கடந்த வாரம் ஐந்து டன் வரத்தானது. நேற்று, 15 டன் வரத்தானது. மர முருங்கை கிலோ, 30 ரூபாய், செடி முருங்கை, 40 ரூபாய், கரும்பு முருங்கை, 50 ரூபாய்க்கு விற்பனையானது.