ADDED : ஜூலை 30, 2026 01:27 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்: தாராபுரம் அருகே, பழனி யாத்திரை சென்ற முருக பக்தர், அரசு பஸ் மோதி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த ரவி பாவுராஜ் மகன் சந்தோஷ்குமார், 28. இவர், தனது நண்பர்களுடன் கோத்தகிரியில் இருந்து, பாதயாத்திரையாக பழனி நோக்கி சென்றார். தாராபுரத்தை அடுத்த ஒத்தக்கடை அருகே நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனடி-யாக, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
