/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூர் காமராஜ் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை
/
நம்பியூர் காமராஜ் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை
நம்பியூர் காமராஜ் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை
நம்பியூர் காமராஜ் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 18, 2025 05:49 AM
நம்பியூர்: நம்பியூர் காமராஜ் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், மாநில அளவில் நான்காமிடமும், கோபி கல்வி மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளது.
பள்ளி மாணவன் கார்த்திகேயன், 496 மதிப்பெண்கள் பெற்று, இந்த சாதனை படைத்துள்ளார். இவரின் மதிப்பெண் விபரம்: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-98. பள்ளி மாணவி லக்சனா, 490, மாணவி அக்சரா, 487 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். ஐந்து மாணவர்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல், பாடங்-களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். பள்ளி, ௨௦வது ஆண்டாக, ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றும் சாதனை படைத்துள்-ளது.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஜவகர், இணை தாளாளர் சுமதி ஜவகர், பள்ளி முதல்வர் மைதிலி, ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.