/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
/
நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 18, 2025 05:50 AM
ஈரோடு: நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்-ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் வெற்றி பெற்றனர்.
மாணவர்கள் அப்சர் அலி மற்றும் உவைஸ் அப்துல் காதர், 490 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடத்தை பகிர்ந்து கொண்-டனர். கனுவர்சன், 488 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், காவ்யபாரதி, 485 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
தேர்வெழுதியவர்களில், 480 மதிப்பெண்களுக்கு மேல் எட்டு பேர்; 470க்கு மேல், 13 பேர்; 450க்கு மேல், 32 மாணவர்களும் மதிப்பெண் எடுத்தனர். கணிதம், அறிவியல், சமூக அறிவியலில் தலா, 4 மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெற்றனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவியரை தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட் தலைவர் குமாரசுவாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர் மற்றும் உறுப்பி-னர்கள் பாராட்டினர். பள்ளி தாளாளர் தேவராஜா, பள்ளி முதல்வர் மைதிலி, ஆசிரியர்களும் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்-தனர்.