/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணை சாரா கடன் தீர்வு:திட்ட முகாம் துவக்கம்
/
பண்ணை சாரா கடன் தீர்வு:திட்ட முகாம் துவக்கம்
ADDED : மார் 03, 2024 01:50 AM
ஈரோடு;ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் தலைமையில், திண்டல் மலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், பண்ணை சாரா கடன் தீர்வு திட்ட முகாம் நடந்தது.
இணை பதிவாளர் ராஜ்குமார் பேசுகையில், ''ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கங்கள், அதனுடன் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர் கூட்டுறவு சங்கங்கள் உட்பட அனைத்து அமைப்பிலும் பண்ணை சாரா கடன் தீர்வு திட்ட முகாம் நடந்து வருகிறது. இத்திட்ட பயனை பெற வரும், 12க்குள் கடன்தாரர்கள், தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களுக்கு சென்று, ஒப்பந்தம் மேற்கொண்டு, அரசின் சலுகையை பெறலாம்,'' என்றார். சார் பதிவாளர் தர்மராஜ், கடன் சங்க செயலாளர் அன்பழகன், பிரசார அலுவலர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

