sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத் பூஜை கொண்டாடிய வட இந்திய மக்கள் களைகட்டிய கருங்கல்பாளையம் காவிரி கரை

/

சத் பூஜை கொண்டாடிய வட இந்திய மக்கள் களைகட்டிய கருங்கல்பாளையம் காவிரி கரை

சத் பூஜை கொண்டாடிய வட இந்திய மக்கள் களைகட்டிய கருங்கல்பாளையம் காவிரி கரை

சத் பூஜை கொண்டாடிய வட இந்திய மக்கள் களைகட்டிய கருங்கல்பாளையம் காவிரி கரை


ADDED : அக் 29, 2025 01:02 AM

Google News

ADDED : அக் 29, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,சத் பூஜை எனப்படும் சூரியனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வை, பீஹார், ஜார்க்கண்ட், உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநில மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதாவது உயிர்களை காக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது இவ்விழா நோக்கம். சூரியோதயம் மற்றும் அஸ்தமனத்தின் போதும் நீர் நிலைகளில் நின்று, பிரசாதம் படைத்து வழிபடுவர்.

இப்பூஜை கடந்த, 25ல் துவங்கியது. பக்தர்கள் விரதமிருந்து சத் பூஜை மேற்கொண்டனர். இந்நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரியில் நேற்று முன்தினம் மாலை துவங்கி ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் சேர்ந்த வட இந்தியர் மக்கள், விளக்கேற்றி இரவு வரை வழிபாடு செய்தனர். நேற்று அதிகாலை, 4:15 மணி முதல் காலை, 7:15 மணி வரை சிறப்பு பூஜை நடத்தி காவிரியில் விளக்கேற்றி பூஜை செய்தனர். பின் சூரிய பகவானுக்கு உணவு வகைகளை படைத்து வழிபட்டனர். இந்த பூஜைக்கா வட இந்திய மக்கள் குடும்பத்துடன் குவிந்ததால், கருங்கல்பாளையம் காவிரி கரை களை கட்டியது.






      Dinamalar
      Follow us