ADDED : அக் 27, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்தில் முதியவர் படுகாயம்
சென்னிமலை, அக். 27-
சென்னிமலை யூனியன் முகாசிபிடாரியூர் ஊராட்சி சரவணபுரியை சேர்ந்தவர் மாணிக்கம், 76; நேற்று காலை வீட்டில் இருந்து பிடாரியூர் நால்ரோடு செல்ல நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. துாக்கி வீசப்பட்ட மாணிக்கம் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரின் மகன் புகாரின்படி, விபத்து ஏற்படுத்தி பைக் ஓட்டியை, சென்னிமலை போலீசார் தேடி வருகின்றனர்.