ADDED : அக் 07, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கோணவாய்க்கால், மோகன்தோட்டம் பகுதியில், காலிங்கராயன் வாய்க்காலில், பெண் பிணம் மிதப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். ஈரோடு, கருங்கல்பாளையம், கமலாநகர் நான்கா-வது வீதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ரங்கம்மாள், 69, என்பதும், வாய்க்காலில் குளித்தபோது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரிந்தது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.