/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டி.என்.பாளையம் குவாரி விபத்தில் ௩ மாதங்களுக்கு பின் ஒருவர் கைது
/
டி.என்.பாளையம் குவாரி விபத்தில் ௩ மாதங்களுக்கு பின் ஒருவர் கைது
டி.என்.பாளையம் குவாரி விபத்தில் ௩ மாதங்களுக்கு பின் ஒருவர் கைது
டி.என்.பாளையம் குவாரி விபத்தில் ௩ மாதங்களுக்கு பின் ஒருவர் கைது
ADDED : நவ 23, 2024 03:13 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தில் வனச்சாலை செல்லும் சாலையில் வனப்-பகுதியை ஒட்டியுள்ள பகுதியில், ஸ்டார் கிரஷர் கல் குவாரி செயல்பட்டது.
பெருந்துறை, தாசநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன், 70, என்பவருக்கு சொந்தமான இந்த குவாரியில், வெடி வைத்து பாறைகளை தகர்த்தபோது, கோபி, அயலுாரை சேர்ந்த செந்தில்குமார், 50; கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த அஜித்குமார், 27, உடல் சிதறி பலியாகினர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பங்களாப்புதுார் போலீசார், லோகநாதன், அவரின் மனைவி ஈஸ்வரி, மேலாளர் செல்வம் உள்பட ஆறு பேரை, மூன்று மாதங்களுக்கு முன் அடுத்-தடுத்து கைது செய்தனர். விபத்து தொடர்பாக குவாரி மேற்பார்-வையாளரான டி.என்.பாளையம், பெரியார் வீதியை சேர்ந்த பிரகாஷ் 34, என்பவரை தேடி வந்தனர். அவரை நேற்று கைது செய்த போலீசார், கோபி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்ப-டுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து குவாரி வெடி விபத்தில் கைது செய்யப்பட்டோர் எண்-ணிக்கை, ஏழாக உயர்ந்துள்ளது.

