sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேன்-டூவீலர் நேருக்குநேர் மோதல் ஒருவர் பலி; 11 பேர் பலத்த காயம்

/

வேன்-டூவீலர் நேருக்குநேர் மோதல் ஒருவர் பலி; 11 பேர் பலத்த காயம்

வேன்-டூவீலர் நேருக்குநேர் மோதல் ஒருவர் பலி; 11 பேர் பலத்த காயம்

வேன்-டூவீலர் நேருக்குநேர் மோதல் ஒருவர் பலி; 11 பேர் பலத்த காயம்


ADDED : ஆக 03, 2025 01:20 AM

Google News

ADDED : ஆக 03, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே லக்கம்பட்டியை சேர்ந்தவர் அசோக், 28; திருமணமாகி, மனைவி, ஒரு மகள் உள்ளார். ஈரோட்டில் ஜே.சி.பி., ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு, ஹீரோ ஹோண்டா பைக்கில் வீட்டுக்கு நேற்று காலை புறப்பட்டார்.

பவானி-மேட்டூர் சாலையில் சேவனுார் பிரிவு அருகே, 8:30 மணியளவில் சென்றார். அப்போது எதிரே மசாலா நிறுவனத்துக்கு சொந்தமான வேன், தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்தது. எதிர்பாராதவிதமாக பைக்கும், வேனும் நேருக்குநேராக மோதிக்கொண்டன.

இதில் முன்பக்க டயர் அடியில் பைக் சிக்கிய நிலையில், 50 மீட்டர் துாரம் இழுத்து செல்லப்பட்ட வேன், புளியமரத்தில் மோதி நின்றது. இதில் பலத்த காயமடைந்த அசோக்கை, அப்பகுதி மக்கள் மீட்டு பவானி அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

வேன் டிரைவரான அம்மாபேட்டையை சேர்ந்த ஆதித்யா ராஜாவுக்கு, 38, இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. இதில்லாமல் வேனில் பயணித்த ஆண், பெண் தொழிலாளர்கள், ௧௦ பேரும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us