ADDED : ஜூன் 07, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தாராபுரத்தை
அடுத்த குண்டடம் பொடரம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி,
44; தாராபுரத்தில் இருந்து தனக்கு சொந்தமான டாடா ஏஸ் வாகனத்தில்,
ஈரோடு மார்க்கெட்டுக்கு வெங்காயம் கொண்டு வந்து வியாபாரம்
செய்கிறார்.
கடந்த, 3ம் தேதி அதிகாலை சத்தி சாலையில் உள்ள வங்கி முன்
வாகனத்தை நிறுத்தி சென்றார். சில மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது
வாகனத்தை காணவில்லை. அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார்
தேடி வருகின்றனர்.
