sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஊட்டியான மஞ்சள் மாநகர்குளிர்காற்றுடன் துாறல் மழை

/

ஊட்டியான மஞ்சள் மாநகர்குளிர்காற்றுடன் துாறல் மழை

ஊட்டியான மஞ்சள் மாநகர்குளிர்காற்றுடன் துாறல் மழை

ஊட்டியான மஞ்சள் மாநகர்குளிர்காற்றுடன் துாறல் மழை


ADDED : நவ 24, 2025 04:43 AM

Google News

ADDED : நவ 24, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது குளிர்காற்றும் வீசி, சூழலை மேலும் இதமாக்கியது.

இந்நிலையில் மதியம், 1:35 மணிக்கு மிதமான வேகத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. 45 நிமிடம் இடையூறு எதுவுமின்றி அதே வேகத்தில் கொட்டி தீர்த்தது. இதனால் பாதசாரிகள் குடைபிடித்தும், இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும் சென்றனர். இதனால் மஞ்சள் மாநகரான ஈரோடு, ஊட்டி போல் மாறியது. விடுமுறை தினம் என்பதால், வீடுகளில் முடங்கிய மக்கள், காலநிலையை ரசித்து பொழுது போக்கினர்.

துாறல் மழை

அந்தியூர் மற்றும் தவிட்டுப்பாளையம், சின்னதம்பிபாளையம், நகலுார், காட்டூர், பச்சாம்பாளையம், சங்கராப்பாளையம், எண்ணமங்கலம், புதுக்காடு உள்ளிட்ட பகுதி; வெள்ளித்திருப்பூர், மாத்துார், மணல்காடு, ரெட்டிபாளையம், சொக்கநாத மலையூர் பகுதிகளில், நேற்று மதியம், 1:00 மணிக்கு துவங்கிய துாறல் மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இதனால் குளிர் அதிகரிக்க, மக்கள் வீடுகளில் முடங்கினர்.






      Dinamalar
      Follow us