/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈஸ்வரன் கோவிலை 'ஸ்கீம்' கோவிலாக மாற்ற எதிர்ப்பு
/
ஈஸ்வரன் கோவிலை 'ஸ்கீம்' கோவிலாக மாற்ற எதிர்ப்பு
ADDED : நவ 26, 2024 01:35 AM
ஈஸ்வரன் கோவிலை 'ஸ்கீம்'
கோவிலாக மாற்ற எதிர்ப்பு
ஈரோடு, நவ. 26-
ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுவை சேர்ந்த தங்கவேல் உட்பட சிலர், கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:
ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் நுாற்றாண்டுகள் பழமையானது. அறநிலையத்துறையின் கீழ் செயல்படுகிறது. பூஜை உட்பட பல பெயர்களில் சிலர் கமிட்டிகள் அமைத்து வசூலிப்பதும், அதை கோவில், அறநிலையத்துறை நிர்வாகத்திடம் கணக்கை ஒப்படைக்காமல் உள்ளனர்.
தவிர குறிப்பிட்ட சமூகத்தினருக்கான கோவில், அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழான கோவிலாக, 'ஸ்கீம் கோவில்' போன்று செயல்பட சிலர் முயன்று வருகின்றனர். அவ்வாறு அனுமதி வழங்கக்கூடாது. அறநிலையத்துறையில் தொடர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

