sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிற உள்ளாட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு

/

பிற உள்ளாட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு

பிற உள்ளாட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு

பிற உள்ளாட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு


ADDED : ஜன 07, 2025 01:18 AM

Google News

ADDED : ஜன 07, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுடன், ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கினர்.

* பவானிசாகர் யூனியன் நொச்சிகுட்டை பஞ்., - எம்.ஜி.ஆர்., நகர், பொன்மேடு ஆதிதிராவிடர் காலனி, கோவில்புதுார், ஆலாம்பாளையம், நல்லகாளிபாளையம், நல்லுார் பகுதி மக்கள் வழங்கிய மனுவில் கூறியதாவது: நொச்சிகுட்டை பஞ்.,ல் 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். இப்பகுதி முழுமையாக விவசாய நிலம் சார்ந்தது. அங்கு கூலி வேலை செய்கிறோம். அரசின், 100 நாள் வேலை திட்டப்பணியை பெற்று வசிக்கிறோம். தற்போது புன்செய் புளியம்பட்டி நகராட்சியுடன், இக்கிராமங்களை இணைக்க அறிவித்துள்ளனர். இதன் மூலம் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி பல மடங்கு உயரும். 100 நாள் வேலை திட்டப்பணி கிடைக்காது. எனவே, நகராட்சியுடன் இணைக்க வேண்டாம்.

* ஈரோடு யூனியன் எலவமலை, செங்களாப்பாளையம், கதிரம்பட்டி பகுதியை, ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்க ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இதன் மூலம், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். 100 நாள் வேலை திட்டப்பணி பாதிப்பதுடன், அனைத்து வரியும் உயரும், என

தெரிவித்துள்ளனர்.* அக்கரை கொடிவேரி பஞ்., சேர்ந்த மக்கள், கொடிவேரி டவுன் பஞ்., உடன் தங்கள் பஞ்சாயத்தை இணைக்கக்கூடாது. 100 நாள் வேலை திட்டப்பணிகளை இழக்க நேரிடும், என வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us