/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் வரும் 25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு
/
ஈரோட்டில் வரும் 25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு
ஈரோட்டில் வரும் 25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு
ஈரோட்டில் வரும் 25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு
ADDED : அக் 24, 2024 01:26 AM
ஈரோட்டில் வரும் 25ல் தனியார் துறை
வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு
ஈரோடு, அக். 24-
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் ஒவ்வொரு மாதமும், மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதன்படி வரும், 25 காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை முகாம் நடக்க உள்ளது.
வேலைவாய்ப்பு அளிக்கும் தனியார் நிறுவனங்கள், முகாமில் பங்கேற்று, தங்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்யலாம். வேலை நாடுனர்கள், எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல், பட்டப்
படிப்பு, செவிலியர்கள், டெய்லர்கள், கணினி இயக்குவோர், தட்டச்சர், ஓட்டுனர்கள் என பல்வேறு தகுதி உடையோர் பங்கேற்கலாம். தவிர திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. அவர்கள், திறன் பயிற்சிக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பயிற்சி வழங்க உள்ளனர். வேலை வாய்ப்பு அளிப்போர், வேலை நாடுனர், இலவசமாக முகாமில் பங்கேற்கலாம். முகாமில் வேலைவாய்ப்பு பெறுவோரின், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது. கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது, 86754 12356, 94990 55942, மின்னஞ்சல் முகவரி: erodemegajobfair@gmail.com மூலம் தொடர்பு கொண்டு அறியலாம்.

