/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நெல் நடவு பணியில் வெளி மாவட்ட தொழிலாளர்கள்
/
நெல் நடவு பணியில் வெளி மாவட்ட தொழிலாளர்கள்
ADDED : அக் 24, 2024 02:19 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், வெளி மாவட்ட தொழிலாளர்கள், நெல் நாற்று நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கீழ்பவானி பாசனத்துக்கு உட்பட்ட நசியனுார், வில்லரசம்பட்டி, எல்லப்பாளையம், கொங்கம்பாளையம், பெரியசேமூர், கங்கா-புரம் உள்ளிட்ட பகுதிகளில், நெல் நாற்று நடவு பணிகள் தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், நெல் நாற்று நடவு செய்வதற்கு போதிய அளவில் ஆட்கள் கிடைக்காததால், தர்ம-புரி, அரூர், கிருஷ்ணகிரி, பென்னாகரம், சேலம், ஆத்துார், தலை-வாசல், கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்து, விவசாய கூலி தொழி-லாளர்கள், ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில், நெல் நாற்று நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளா-கவே, திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு கிராம பகுதியில் இருந்து நேரடியாக பஸ்களும், வாகனங்களும் இயக்கப்படு-வதால், அப்பகுதி மக்கள் அதிகளவில் பனியன் மற்றும் கார்மென்ட்ஸ் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். இதுத-விர, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பலர் வேலைக்கு சென்று விடுகின்றனர். இதனால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்கு-றையை நிவர்த்தி செய்ய, வெளியூர்களிலிருந்து ஆட்களை வரவ-ழைக்க வேண்டியுள்ளது. அந்த வகையில், ஈரோட்டில் கீழ்பவானி பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நெல் நாற்று நடவு பணிகளில் வெளி மாவட்டங்-களை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கூறினர்.

