ADDED : நவ 04, 2025 01:55 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு, மேட்டுநாசுவம்பாளையம், பச்சப்பாளியில் பகுதி நேர ரேஷன் கடையின் புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. கடந்த, 2021ல், 167 கார்டுகளை பிரித்து புதியதாக உருவாக்கப்பட்டது. வாடகை கட்டடத்தில் இயங்கிய கடைக்கு சொந்த கட்டடம் கட்டி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று திறந்து வைத்தார்.
கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்கி, குறை கேட்டறிந்தார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.
