sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாரா வாலிபால் போட்டி: ஈரோடு பெண்கள் அபாரம்

/

பாரா வாலிபால் போட்டி: ஈரோடு பெண்கள் அபாரம்

பாரா வாலிபால் போட்டி: ஈரோடு பெண்கள் அபாரம்

பாரா வாலிபால் போட்டி: ஈரோடு பெண்கள் அபாரம்


ADDED : பிப் 06, 2024 10:54 AM

Google News

ADDED : பிப் 06, 2024 10:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம், ஈரோடு உணர்வுகள் அமைப்பு சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆற்றல் கோப்பை வாலிபால் போட்டி நடந்தது. ஆண்கள் பிரிவில், 18 அணிகள், பெண்கள் பிரிவில் ஒன்பது அணிகள் கலந்து கொண்டன.

சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடந்த போட்டிக்கு, தமிழ்நாடு பாரா கைப்பந்து கழக தலைவர் மக்கள் கே.ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜா வரவேற்றார். ஆற்றல் அறக்கட்டளை நிறுவன தலைவர் ஆற்றல் அசோக்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு டிராபி, சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.

பெண்கள் பிரிவில் வேலுார், கோவை, மதுரை, ஈரோடு மாவட்ட அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்ததன. ஆண்கள் பிரிவில் ராணிப்பேட்டை, கடலுார், கோவை, சேலம் மாவட்ட வீரர்கள் முதல் நான்கு இடங்களை பிடித்தனர். நிறைவு விழாவில் திரைப்பட நடிகர் ரிஷிகாந்த் வாழ்த்துரை வழங்கி பேசினார். ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us